கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு!

Tuesday, February 14th, 2017

உணர்ச்சியான கவர்ச்சியான தேர்தல்கால வாக்குறுதிகளை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளால் எமது மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றமையானது வருத்தமளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற நல்லூர் பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த காலங்களில் குறிப்பாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதிகளில் யுத்தத்தை நடத்திய அரசுகளுடன் ஒரு இணக்கப்பாடான அரசியலை முன்னெடுத்த நாம் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களுக்கூடாக முடிந்த வரையில் நிறைவு செய்துள்ளோம்.

அக்காலப்பகுதிகளில் எமது தலைமையையும் எமது கட்சியையும் விமர்சித்துக்கொண்டு தமது சுயலாப அரசியலை சக தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்திருந்து வந்ததை யாவரும் அறிவார்கள். குறிப்பாக தேர்தல் காலங்களில் தமது வாக்குகளை இலக்காகக் கொண்டு செயற்படும் சுயலாப அரசியல்வாதிகள் உணர்ச்சியான கவர்ச்சியான பேச்சுக்களாலும் பொய்யான வாக்குறுதிகளாலும் மக்களின் வாக்குகளை அபகறித்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர் ஆனால் வெற்றி பெறும் அவர்கள் தேர்தல் முடிந்த பின்னரான காலப்பகுதிகளில் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ளவதில்லை. ஆனால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலின் கீழ் எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டிற்கு அமைய அன்று தொட்டு இன்றுவரை மக்களுக்கான சேவைகளை அயராது அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றோம். இவ்வாறான எமது பணிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா.வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்,  கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் உடனிருந்தனர்.

 04

03

Related posts: