களுத்துறை படகு விபத்தில் 9 பேர் பலி: பலரை காணவில்லை!
Sunday, February 19th, 2017களுத்துறை – பயகல கடற்பகுதியில் படகொன்று தலைகீழாக கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் படகில் பயணித்த பலரை காணவில்லையெனவும், இதுவரையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நீரில் மூழ்கியுள்ள ஏனையவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை கடற்பகுகளில் திடீரென மணித்தியாலயத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும், மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
Related posts:
புதிய அரசியலமைப்பு ஐக்கியமான நாட்டை கட்டியெழுப்ப உதவும் - அமைச்சர் மங்கள சமரவீர!
மருதானை பொலிஸ் அதிகாரி தற்கொலை தொடர்பில் தீவிர விசாரணை!
தேவையற்ற அரச செலவீனங்களைக் குறையுங்கள் - அமைச்சரவைக்கு ஜனாதிபதி உத்தரவு!
|
|