கல்வியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை!

Wednesday, November 16th, 2016

கல்வியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதுடன் மாணவர்கள் ஜனவரி மாதம்முதல்  கல்லுரிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்னர் என்று ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்தார்.

50 சதவீதமான மாணவர்கள் திறமை அடிப்படையிலும், ஏனைய 50 சதவீதமானோர் பிரதேச செயலாளர் மட்டரீதியிலும் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிருந்து நான்காயிரத்து 65 பேர் கல்வியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் ஆணையாளர் தெரிவிதார். கூடுதலானோர் ஆரம்ப கல்விப் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

4cddd5e3711793b14ffafe620381a89b_XL

Related posts:


பதிவு செய்யப்படாத முன்பள்ளிகளின் நிலைகளை ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழு நியமிப்பு!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட...
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தொடர்பில் மீளாய்வு - சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெர...