கல்வியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை!
Wednesday, November 16th, 2016கல்வியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதுடன் மாணவர்கள் ஜனவரி மாதம்முதல் கல்லுரிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்னர் என்று ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்தார்.
50 சதவீதமான மாணவர்கள் திறமை அடிப்படையிலும், ஏனைய 50 சதவீதமானோர் பிரதேச செயலாளர் மட்டரீதியிலும் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிருந்து நான்காயிரத்து 65 பேர் கல்வியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் ஆணையாளர் தெரிவிதார். கூடுதலானோர் ஆரம்ப கல்விப் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
Related posts:
நாடாளுமன்றில் கோப் குழுவின் விசேட கூட்டம் - எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துடன், உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - கிராம உத...
இந்திய - இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் - மார்ச் மாதத்துக்குள் நிறைவு செ...
|
|