இன்று நிதி திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

Tuesday, August 9th, 2016

உத்தேச நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் செய்யப்படவுள்ளது.

2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய இந்த திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, வற் வரி அதிகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான தீர்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பற்றி சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts: