கர்ப்பிணித்தாய்மார்கள் தமது வதிவிடங்களை உறுதி செய்யவும்!

Thursday, June 13th, 2019

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார் மகப்பேற்றுக்கு முன்னதாக தமது வதிவிடத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மகப்பேற்றுக் காலத்தில் வழங்கப்படுகின்ற மகப்பேற்று உதவிப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிலருக்கு பதிவுகள் தடையாகக் காணப்படுவதால் அதனை முன்னரே நகரசபையில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சில கர்ப்பிணித் தாய்மார் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வசிக்கின்ற போதிலும் அவர்கள் அந்தந்தக் கிராமங்களில் பதிவு செய்யாமல் இருப்பதனால் இந்தச்சிக்கல் நிலை ஏற்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: