கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி – மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் தெரிவிப்பு!
Tuesday, May 18th, 2021
கர்ப்பினி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சாமிந்த மாதொட கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போது கலந்துக் கொண்ட மகப்பேற்று வைத்தியர்களால் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கு அந்த குழு அனுமதி வழங்கியதுடன், இதற்கான திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலவச கல்வி தொடர்பில் ஜனாதிபதி!
இப்ராஹிம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு ஓராண்டு பூர்த்தியை ஒட்டி கௌதாரிமுனை மக்களுக்கு வயற்காணி வழங்கல் - இணை...
|
|
|
சீனாவின் ‘சினோவக்’தடுப்பூசியை இலங்கை கூட்டாக தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்பதல் - இன்றைய சர்வதேச...
மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுற...
கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பா காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ளக...


