கமரா கண்காணிப்பு பாதுகாப்புடன் நல்லூர் !
Wednesday, August 3rd, 2016
எதிர்வரும் 8ஆம் திகதி வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவம் நடைபெறவுள்ளதால், அங்கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி கண்காணிப்புக் கமரா அமைக்கப்போவதாக யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.
இம்முறை நல்லூர் திருவிழாவிற்கு, புலம்பெயர் தமிழர்களும், தெற்கிலிருந்து சிங்கள மக்களும் பெருமளவில் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நல்லூரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே கண்காணிப்புக் கமரா பொருத்தப்படவுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்
Related posts:
கூட்டுறவு கிராமிய வங்கியூடான கடன் வழங்கல் விரைவுபடுத்தப்படும் - கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்!
நாளை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!
பாக்குநீரிணையை இரு முறை நீந்திக் கடந்து சாதனை படைத்த இலங்கை விமானப் படைவீரர்!
|
|
|


