கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவுமுதல் ஆரம்பம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Monday, March 28th, 2022
நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.
இதன்படி, நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுவினை விரைவில் நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயுமாறு சில சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டுவிழா செப்டம்பர் 3இல் – ஜனாதிபதி
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது - பொலிஸார் அறிவிப்பு!
கந்தகாடு சம்பவம் - இதுவரை 261 பேர் கைது - தேடுதல் இன்றும் தொடர்கிறது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்...
|
|
|


