கத்தோலிக்க மக்களின் புனித பூமியாகிறது மடு!
Wednesday, August 1st, 2018மன்னார் மடுப் பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மடுமாதா ஆலயம் அமைந்துள்ள மடுப்பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்தார். அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மடுப்பிரதேசம் புனித பூமியாக அரசிதழ் ஊடாக அறிவிக்கப்படும். அதேவேளை மைத்திரிபால சிறிசேன கடந்த ஞாயிற்றுக்கிழமை மடுமாதா ஆலயத்துக்குப் பயணம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
Related posts:
5000 ரூபா நாணயத்தாளுக்கு ஆபத்து?
அமரர் வைத்திய நிபுணர் ரகுபதி அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அஞ்சலி மரியாதை!
தவறான கருத்துக்களைப் பரப்பி எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்...
|
|