கண்ணிவெடி அகற்றும்போது சிதறியது இடது கை – முகமாலையில் சம்பவம்!

Thursday, July 26th, 2018

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவரின் கை சிதறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

கண்ணிவெடி மீட்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கண்ணிவெடி வெடித்துள்ளது. அதன்போது குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாரட்ன (வயது-45) என்பவரின் கைகள் கடும் காயங்களுக்கு உள்ளாகின. அவர் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இடது கையில் பலத்த சிதறல் காயம் காணப்பட்டதால் மணிக்கட்டுப் பகுதியுடன் கை அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: