கணினிக் கட்டமைப்பில் கோளாறு- அஞ்சல் திணைக்களம் தகவல்!
Saturday, April 28th, 2018
அஞ்சல் திணைக்களத்தின் கணனிக் கட்டமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொழில்நுட்பக் கோளாறானது அதன் கொள்ளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கணனிக் கட்டமைப்பில் கடந்த 4, 5 வார காலப்பகுதியில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அது கணனிக் கட்டமைப்பின் பணிகளை முடக்கும் வகையில் தாக்கம் செலுத்தவில்லை எனவும் அஞ்சல் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தீவிரம் அடையும் கொரோனா : ஒரு நோயாளியால் 406 பேருக்கு பரவு வாய்ப்பு - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
மே 9 வன்முறை: பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்து நட்டஈடு பெற நடவடிக்கை - இலங்கை தனியார் ...
பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்...
|
|
|


