கட்டுநாயக்க ஊடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட 50 கிலோகிராம் நிறையுடைய ஹசீஷ் ரக போதைப்பொருள் மீட்பு!

Tuesday, October 3rd, 2023

கட்டுநாயக்க – சரக்கு களஞ்சியத்தின் ஊடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட பொதியொன்றிலிருந்து சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய ஹசீஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் வருவாய் கண்காணிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: