கடல் மாசுபாடு குறித்த இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வு – மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் சுற்றாடல்துறை அமைச்சர் வலியுறுத்து!
Wednesday, July 7th, 2021சமுத்திரத்திற்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை கொட்டும் உலக நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச அமைப்புக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயுமாறு சுற்றாடல்துறை அமைச்சர் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே இலங்கையில் நாள் ஒன்றுக்கு 5.1 கிலோ கிராம் தனிநபர் கழிவுகள் கொட்டப்படுவதாக அந்த ஆய்வறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டில் தனிநபர் ஒருவரால் நாள் ஒன்றில் 500 கிராம் கழிவுகளே வெளியேற்றப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு சர்வதேச அமைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓய்வூதிய தொடர்பான சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைக்க முயற்சி!
சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர்களுக்கான வரவேற்பு பீடம் மூடப்படுகிறது!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை - கல்வி அமைச்சர் தெரிவி...
|
|