கடலோரப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது – பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, July 24th, 2024

கடலோரப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடற்கரை மாசுபாடு மற்றும் சட்டவிரோதக் கட்டுமானங்களைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கரையோர வளங்கள் மற்றும் கரையோர முகாமைத்துவத் திட்டம் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: