கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக திருமதி சோமரத்ன பொறுப்பேற்பு!

Wednesday, January 3rd, 2024

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரியான திருமதி கே.என். சோமரத்ன 01.01.2024ம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடற்றொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய திருமதி இந்து ரத்நாயக்க ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி கே.என். சோமரத்ன, 1995ம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதுடன் இறுதியாக துறைமுக கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றியதுடன் இலங்கை துறைமுக அதிகார சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்களான திருமதி அப்சரா நிசங்க, தம்மிக ரணதுங்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts: