கடந்த 24 மணி நேரத்தில் 1,766 பயணிகள் இலங்கை வருகை!
Monday, March 29th, 2021கடந்த 24 மணிநேரத்தில் விமானங்களின் ஊடாக 1,766 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதிக்குள் 17 சரக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், 12 விமானங்களின் ஊடாக 741 பேர் கட்டார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளை நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, கடந்த 24 மணிநேரத்தில் 148 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் - ...
ஜனாதிபதி அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|