கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

Friday, July 9th, 2021

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில்  ஆயிரத்த 270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் ஆயிரத்து 223 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவானதுடன், 47 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 69 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 27 ஆயிரத்து 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எங்களுடைய சமுதாயம் ஒரு பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது - பல்கலை துணைவேந்தர் வசந்தி அர...
தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்து வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல - பாதுகாப்பு செயலர்...
வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள் - பொதுமக்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை!