கடந்த நள்ளிரவுமுதல் இரத்தானது நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம்!
 Saturday, May 21st, 2022
        
                    Saturday, May 21st, 2022
            
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் இரத்தாகியுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதும் நடைமுறைப்படுத்துவதும் நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில், அது நிறைவேற்றப்பட்ட 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனினும், 14 நாட்களுக்கு மேலாகியும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
குடாநாட்டில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு!
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வெப்பம் – எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து!
கொள்ளையிட முயற்சி செய்தால் துப்பாக்கிச் சூடு !
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        