சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைக் குழுவினர் பங்கேற்பு!

Monday, March 21st, 2022

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வு இந்தோனோஷியாவின் பாலியில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த அமர்வானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவும், குறித்த அமர்வில் பங்கேற்றுள்ளது.

குறித்த குழுவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், காவிந்த ஜயவர்தன, ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது இளைஞர்கள் தொடர்பான விடயங்கள், காலநிலை மாற்றம், உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மத்திய வங்கியிடமிருந்து இன்றையதினம் டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக பால்மா இறக்கும...
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல்...
உயிர்த்த ஞாயிறு விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பான முறையில் செயற்படுகின்றது...