ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழை 25ற்கு முன் சமர்ப்பிக்கவும்!

Friday, January 13th, 2017

நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழைப் பூர்த்தி செய்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிர்வாழ் சான்றிதழைச் சமர்பிக்க தவறுபவர்கள் பிரதேச செயலர் பிரிவுக்குள் வதிவதில்லை எனக் கருத்திற் கொண்டு எதிர்வரும் பங்குனி மாதத்திலிருந்து ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படும் அத்துடன் ஓய்வூதிய புகையிரத ஆணைச்சீட்டு இவ்வருடம் முதல் தரவுத் தளத்தினூடாக வழங்குவதனால் அதற்குரிய விண்ணப்பபடிவத்தையும் உரிய கிராம அலுவலரிடம் பூர்த்தி செய்து அதனை பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலதிக விபரங்களை தங்கள் பிரிவு கிராம அலுவலரிடம் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதேச செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

Pensioners-720x480

Related posts: