ஓமந்தையில் பேருந்து விபத்து: பலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!
Wednesday, November 22nd, 2017வவுனியா – ஓமந்தை பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில் மரத்தடிகளை ஏற்றி வந்த கெப் ரக வாகனமொன்று ஓமந்தை இராணுவச்சாவடிக்கு அருகே வீதியில் தரித்து நின்ற சமயத்தில் அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கெப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மீண்டும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு!
சுகாதார பாதுகாப்பை உறுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 370 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு -...
வன்னி மாவட்ட விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரத்து முன்நூறு மில்லியன் ஒதுக்கீடு- விவசாய அமைச்சர் மஹிந்...
|
|