ஓட்டோ சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம்!
Monday, September 26th, 2016
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் தொடர்பில் புதிய ஒழுங்குமுறை திட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பயணிகள் போக்குவரத்துக்காக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டிகளால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் இந்த வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்!
மத்திய வங்கியின் வட்டி வீத உயர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் - வெளிப்படுத்த வேண்டிய நபர...
|
|
|


