ஒரு வாரத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் – பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 2 ஆம் திகதி இறுதி தீர்மானம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, April 28th, 2021

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 2, ஆயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிமுதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது.

இம்முறை பரீட்சைக்காக 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைகழகங்கள் மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் மே 2 ஆம் திகதி எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: