ஒரு மில்லியன் ரூபா செலவில் வேலணைக்கு வீதி விளக்குகள் – தவிசாளர் கருணாகரகுரு மூர்த்தி!
Monday, August 13th, 2018வேலணைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தெரிவித்தார்.
இது பற்றி மேலும் தெரிவித்ததாவது:
வேலணைப் பிரதேச சபைக்கு உட்பட்ட 12 வட்டாரங்களுக்கும் வீதி விளக்குகள் பொருத்த வேண்டிய தேவை உள்ளது. இது தொடர்பில் வட்டாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்திருந்தனர்.
மாகாண சபைகளில் குறித்தொதுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவில் வீதி மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. அதற்காக மின்சார சபையுடன் கலந்துரையாடினோம். அதற்கு அமைவாக மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு தற்போது அதனைப் பொருத்தி வருகின்றோம். முதற் கட்டமாக வேலணை வங்களாவடி பகுதியில் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
Related posts:
இலங்கையில் இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை!
உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் விரும்பவேண்டும் - இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஞானதாசன்
இலங்கையில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்!
|
|