ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவில் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, March 23rd, 2021

ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவதனை தடுப்பதற்காக இந்த சேவை கடந்த காலங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் தேசிய அடையாள அட்டையை பெறுவோர், பத்தரமுல்ல தலைமை அலுவலகம் அல்லது தென் மாகாண பிராந்திய அலுவலத்திற்கு நேரடியாக வருவதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

அதற்காக தங்கள் பிரதேச செயலக அலுவலகத்தின் அடையாள அட்டை பிரிவின் 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் பொது சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு எதிர்பார்க்கும் நபர்கள் தங்கள் கோரிக்கைளை கிராம சேவகர் மூலம் பிரதேச செயலக அடையாள அட்டை பிரிவிற்கு அனுப்ப முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த கோரிக்கை திணைக்களத்திற்கு கிடைத்த பின்னர் தேசிய அடையாள அட்டை அச்சிட்டு விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு செய்யுங்கள் - வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவ...
கொரோனா சோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு- அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டும் பரிசோதனை – நாளை முக்கிய...
இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா - இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்க...