ஒரு தினமாக மட்டுப்படுத்தப்பட்டது இவ்வார நாடாளுமன்ற அமர்வு!

Tuesday, October 8th, 2019

எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத்தேர்தல் காரணமாக இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதுடன் அடுத்த நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள விவாதத்தை தொடர்ந்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பிலும் இன்று விவாவத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related posts: