ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜீன் மாதமும் வழங்குவதற்கு ஏற்பாடு – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, May 14th, 2020

கொரோனா வைரஸ் தாக்க நிலைமை சீரடையாத காரணத்தினால் ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்பட்டுவரும் நிலையில் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுகாதார தரப்பினரது ஆலோசனையின் பிரகாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் வறிய மக்களது சிரமங்களைப் போக்குவதற்காக அரசாங்கத்தால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இடர்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாவை வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: