ஏப்ரல் இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளர்த்த நடவடிக்கை – சுகாதார பணிப்பாளர்!

Sunday, April 12th, 2020

ஏப்ரல் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாத இறுதிக்குள் ஊரங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொளள்ப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் வைரஸை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு, சமூக விலகலை உறுதி செய்து, ஒரு சாதாரண வாழ்க்கையை பராமரிப்பதில் பொதுமக்கள் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறும் பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: