எல்லைத்தாண்டிய தமிழக மீன்பிடியாளர்களின் படகு விபத்து – நீர்ல் மூழ்கிய இருவர் மீட்பு – ஒருவர் மாயம்!

Tuesday, October 19th, 2021

யாழ்ப்பாணம், காரைநகர், கோவிளம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகு விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்து மீட்கப்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் படகிலிருந்து மற்றுமொரு நபர் காணாமல்போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்திலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் மூவர், இலங்கை காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அதனை அவதானித்துள்ளனர்.

அதன்பின்னர், இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட அவர்கள் மூவரையும் சுற்றிவளைக்க முயன்றபோது கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில் மீனவர்களின் விசைப் படகு கடலில் மூழ்கியுள்ளது.

இதனால் படகில் இருந்த மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர். பின்னர் அவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன், மற்றைய மீனவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல்போயுள்ள மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இருவரும் காரைநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: