எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்பவுள்ளதாக தகவல்!

Sunday, March 31st, 2024

ரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது

இந்த விலை திருத்தத்தில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் லீற்றரின் விலை 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

இருப்பினும், ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

எனினும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதையும், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்து வருவதையும் கருத்தில் கொண்டு இந்த விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: