எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர்  மேலும் கூறுகையில் –

பூஜ்ஜியத்திலிருந்து 4% வரை ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில் விலை சூத்திரத்தை செயல்படுத்த நாங்கள் எண்ணியுள்ளோம்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், பிற LIOC கள் மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4% ஐப் பயன்படுத்த முயற்சிக்கிறோம்.

கடந்த ஆண்டு விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தியதால் பழைய கடனையும், வங்கிகளில் வாங்கிய கடனையும் ஈடுகட்ட முடிந்தது.

இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம்  என நம்புகின்றோம். என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: