எரிபொருள் விலைச்சூத்திரம் புரியவில்லை!
Saturday, October 20th, 2018எரிபொருள் விலைச் சூத்திரம் தமக்கு புரியவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் –
அறிமுகம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்கு பொருத்தமற்றது. பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாத வகையிலும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கிலும் ஓர் பொறிமுறைமையை உருவாக்குவது போதுமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாளை முதல் அரச அலுவலகங்களில் நேர மாற்றம்!
சிறுவர் இல்லங்களை தரப்படுத்த நடவடிக்கை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் நடைமுறையில் மாற்றம் - போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
|
|