எரிபொருள் விலைச்சூத்திரம் புரியவில்லை!

Saturday, October 20th, 2018

எரிபொருள் விலைச் சூத்திரம் தமக்கு புரியவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் –

அறிமுகம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்கு பொருத்தமற்றது. பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாத வகையிலும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கிலும் ஓர் பொறிமுறைமையை உருவாக்குவது போதுமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: