எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க அமைச்சர் வழங்கிய கைப்பேசி இலக்கம்!
Wednesday, March 30th, 2022எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கோரியுள்ளார்.
இது தொடர்பில் தமக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்குமாறும் அமைச்சர் தனது தொலைபேசி இலக்கத்தையும் ஊடகவியலாளர்களிடம் முன்வைத்தார்.
இதன்படி, 077-7414241 என்ற கைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த பிரச்சினை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும், அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
சுதந்திரத்தின் பின்னர், பாரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கியுள்ளோம் - நிதி அமைச்சர் நாடாளும...
எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் - இலங்கை பெற்றோலிய ...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவென் - அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
|
|