எரிபொருள் நெருக்கடிக்கு இன்னும் சில நாள்களில் தீர்வு – அமைச்சர் காமினி லொகுகே உறுதியளிப்பு!

Sunday, March 6th, 2022

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆகவே எரிபொருள் நெருக்கடி இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுமக்கள் இன்றும் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காணமுடிந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


சிறைக்குள் தாக்கினர் என்று பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு: மது நிலைய சிசிரிவி பதிவின்படி கைது செய்யு...
கொரோனா தொற்றின் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அ...
நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் வெள்ளி தோறும் சைக்கிளில் வேலைக்குச் செல்வதற்கான விஷேட திட்டம்!