எரிபொருள் – எரிவாயு விநியோகம் தொடர்பான முறைக்கேடுகளை அறிவிக்க விசேட இலக்கம்!

Wednesday, April 13th, 2022

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, ஏற்படக்கூடிய முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட கைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தத்தமது பிரதேசங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, ஏற்படக்கூடிய முறைகேடுகள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் 0711 691 691 என்ற இலக்கத்தின் ஊடாக அறிவிக்கமுடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஐந்து நாட்களுக்கும் மேலாக பெற்றோல் மற்றும் டீசல் கொண்ட 4 தாங்கி ஊர்திகளை மறைத்து வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜா-எல – பமுனுகம பிரதேசத்தில் அனுமதியற்ற இடத்தில் குறித்த டீசல் மற்றும் பெற்றோல் தாங்கி ஊர்திகளை சந்தேகநபர் மறைத்து வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் வத்தளை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பமுணுகம பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு - அமைச்சர் நிமல் ச...
புலிகளின் சீருடைகளை சிறுவர்களுக்கு அணிவித்தமை முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு - பாதுகாப்பு இராஜாங...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி – துரிதகதியில் முன்னெடுக்கப்படும் இணுவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான ...

பொதுவாக உத்தியோகத்தர்கள் போன்று தமக்கான ஊதியம் இந்த ஆட்சியில் கிடைக்கும் - முன்பள்ளி அசிரியர்கள் நம...
குறுகிய காலத்தில் இலங்கையை மீட்க ஜனாதிபதியால் முடிந்தது – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமக...
பருவகாலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை 95 முதல் 110 ரூபாவுக்கு இடையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை -...