எந்த தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை – கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவிப்பு!.

கொரோனா வைரஸ் தொடர்பான எந்த விபரங்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கு அவ்வாறானமெதாரு தேவையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பான உண்மையான புள்ளிவிபரங்களையும் ஏனைய விபரங்களையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கம் தொடர்ந்தும் பொதுமக்களிற்கு உண்மையான தகவல்களை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை ஏப்பிரல் 17 ஆம் திகதிக்குள் ஒழித்துவிடலாம் என சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார் என எதிர்கட்சிகள் தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தள்ள அமைச்சர் நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பும் அவசியம் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
Related posts:
|
|