எந்தப் பரீட்சைக்கும் தயார் – சைட்டம் மாணவர் தெரிவிப்பு!

Saturday, March 18th, 2017

மருத்துவப் பட்டத்தைப் பெறுவதற்காக எந்தப் பரீட்சைக்கும் முகங்கொடுக்கத் தாம் தயாராக இருக்கின்றார்கள் என மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர்கல்வி அமைச்சு அல்லது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் பரீட்சைகளை எதிர்கொள்ள எப்போதும் தாம் தயாராக உள்ளனர் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் பணம் செலுத்தி வர முடியும். அந்தச் சந்தர்ப்பத்தை தமக்கு வழங்குமாறே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: