எதிர்வரும் 22 இல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!
Thursday, January 18th, 2018
எதிர்வரும் 22ம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகின்றது.
இதற்கமைய மாவட்ட செயலக அதிகாரிகள் 22ம் திகதி வாக்களிக்க முடியும் என்றும் அரச நிறுவனங்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் 25ம் திகதியும் பொலிசார்26ம் திகதியும் தபால்மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தினங்களில் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு பெப்ரவரி மாதம் 1ஆம் 2ஆம் திகதிகள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கிராமப்புறப் பாடசாலைகளுக்குத்துறை சார்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய...
பாதுகாப்பு படையினருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் இந்தியா உறுதி!
இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ...
|
|