எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!.
Saturday, February 10th, 2024ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாட்டின் சில பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!
அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக விசாரணை இடம்பெறுகின்றது - ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி அமைச்ச...
யாழ்ப்பாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளில் மீற்றர் மானி பொருத்துவது கட்டாயம் – யா...
|
|