எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் ஊரடங்டகுச் சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்பு!

Thursday, May 7th, 2020

சமூக இடைவெளியை பேணும் வகையில் நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 11 ஆம் திங்கட்கிழமை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணித்துள்ளார்.

மேலும் கொரோனா அபாய வலயங்களாகக் கருதப்படும் மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய மக்கள் செயற்படவேண்டும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்களை சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுகளின்போதும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்ப்பாணம் நாக விகாரை மீது விஷமிகள் தாக்குதல் - மக்கள் குழம்பமடைய வேண்டாம் என விகாராதிபதி ஸ்ரீ விமல...
புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணை புரியட்டும் – வாழ்த்துச் செய...
நெருக்கடியான சூழல்களின்போது அனைவரும் தியாகங்களை செய்ய நேரிடும் - அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் ப...