எதிர்வரும் தினங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும் – கனியவள கூட்டுத்தாபனம்!
Wednesday, November 1st, 2017
எதிர்வரும் தினத்தில் எரிபொருளின் விலையை குறைக்க கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலையில் கனியவள கூட்டுத்தாபனத்தின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு எதிர்வரும் தேர்தல் மற்றும் வரலவு செலவு திட்டத்தை இலக்காக வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனியவள கூட்டுத்தாபனத்தின் ஓகஸ்ட் மாத இலாபம் 7 ஆயிரத்து 729 மில்லியன் ரூபாய் எனவும் செப்டம்பர் மாதத்தில் அந்த கூட்டுத்தாபனத்தின் இலாபம் 9 ஆயிரத்து 630 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் , பங்கு மதிப்பாய்வு குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி , எதிர்வரும் தினத்தில் விசேடமாக டீசல் மற்றும் பெட்ரோலின் விலை குறிப்பிட்டளவில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ..
Related posts:
கைதிகளை பார்வையிட 02 நாட்களுக்கு சந்தர்ப்பம்!
வருகிறது புதிய நடைமுறை - சாரதிகளுக்கு எச்சரிக்கை!
மேலும் 472 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!
|
|