எதிர்வரும் திங்கள்முதல் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Friday, April 30th, 2021பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இன்றையதினம் பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவசரகாலச்சட்டம் நீக்கம் - அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
மகப்பேற்றுச் சிகிச்சைப்பிரிவு மீண்டும் செயற்படத் தொடங்கியது!
நாளை தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்..!
|
|