எதிர்வரும் திங்கள்முதல் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
Saturday, November 28th, 2020எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பேருந்துகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பேருந்து சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வார இறுதி நாட்களில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரம் இயக்கப்படும் தொடருந்து சேவைகளே அடுத்த வாரமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முச்சக்கர வண்டிகளுக்கு புதிய ஒழுங்குமுறை திட்டம்!
பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம் - கல்வியமைச்சு அறிவிப்பு அறிவிப்பு!
கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு!
|
|