எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அமைச்சரவையில் புதிய மாற்றம்?

Saturday, February 17th, 2018

தற்போதைய அமைச்சரவையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மாற்றம் ஒன்றை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தான் நல்லாட்சி அரசின் பிரதமராக பதவியில் நீடிக்கவுள்ளதாகவும் அதனை அடுத்து அமைச்சரவையில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும்பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அமைச்சர்களான சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, திலக் மாரப்பன போன்றோருக்கு முக்கியமான அமைச்சுப் பதவிகள் கிடைக்கும்வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இதேவேளை புதியவர்கள் சிலர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படலாம் என்றும்  சுதந்திரக் கட்சியும் அமைச்சரவையில் நீடித்திருக்க உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: