எதிர்வரும் டிசம்பர் மாதம் உயர்த பரீட்சையை நடத்த முடியும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, February 9th, 2024

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எனவே தற்போது விடைத்தாள்கள் திருத்தல் முறையாக நடைபெற்று வருகிறது.

உயர்தர விடைத்தாள்கள் திருத்தம் குறித்த நேரத்தில் பூர்த்தி செய்ய முடிந்தால் 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்யும் பொறுப்பு அமைச்சின் செயலாளர்களிடமே உள்ளது - அமைச்சரவை அந்தஸ்துள...
பல்வேறு வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு முன்னர் சுகாதாரப் பரிந்துரைகளை கடைபிடியுங்கள் - பொதுச் சுகாதா...
பெருந்தோட்ட நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரம் ஜனவரியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்...