எதிர்வரும் காலாண்டுப் பகுதிக்குள் எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!
Saturday, May 22nd, 2021
எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையில், சரக்கு போக்குவரத்து இடம் பெறாமையினால் ஏற்பட்டுள்ள கொள்கலன் பற்றாக்குறையின் காரணமாக, சரக்கு போக்குவரத்துக்கான செலவும் சர்வதேச ரீதியில் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்’.
அதேநேரம் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருட்டுக் குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் கைது!
அமெரிக்காவின் ஆறாத சோகம் : அமெரிக்க இரட்டை கோபுர தகர்ந்த 17 வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!
கொவிட் பரவலுக்கு மத்தியில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான புதிய சுற்று நிருபம் !
|
|
|


