எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்யும் பொறுப்பு அமைச்சின் செயலாளர்களிடமே உள்ளது – அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் செயலாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்து!
Thursday, January 20th, 2022
அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பும் அமைச்சின் செயலாளர்களிடமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் செயலாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமரின் புதிய செயலாளராக அநுர திசாநாயக்க ஜனாதிபதியிடம் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
நீர்பாசன அமைச்சின் செயலாளராக இதுவரை செயற்பட்ட அநுர திசாநாயக்க, சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியாவார்.
அவர் இன்று (20) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாகவும் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை வெற்றிடமாகவிருந்த நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் பதவிக்கு அய்வன் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நேற்று முற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


