எச்.ஐ.வி தொற்று – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, June 13th, 2019

நாட்டில் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றினால் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விஷேட வைத்தியர் திருமதி.சந்திரிகா ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3200க்கும் அதிகமாகும் என்றும், அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களுள் எச்.ஐ.வி தொற்று பாலியல் செயற்பாட்டு காரணமாக ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆரம்ப காலப்பகுதியில் எயிட்ஸ் நோய் ஆண், பெண் மூலமே பரவியதுடன் தற்பொழுது இந்த நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

இந்த நோயை அடையாளம் காண்பதற்கு இரத்த பரிசோதனை மாத்திரம் போதுமானது. இது தொடர்பான இரத்த பரிசோதனை இலவசமாக மேற்கொள்ள முடியும். அரசாங்க வைத்தியசாலைகளிலும் இந்த பரிசோதனை இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: