எச்சரிக்கையாக இருங்கள்கு பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Friday, January 22nd, 2021சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் பயன்பாடுகள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொது மக்கள் மிகவும் வழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இந்த மோசடிகளில் பெரும்பாலானவை வலை அல்லது மொபைல் பயன்பாட்டு அடிப்படையிலான எளிதான கடன் திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஈர்க்கின்றன.
இதுபோன்ற கடன் விண்ணப்ப மதிப்பீட்டு செயல்பாட்டின் போது, மோசடி செய்பவர்கள் இரகசியமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல் / தரவைப் பகிர்ந்து கொள்ள பொதுமக்களை கவர்ந்திழுக்கிறார்கள்.
இந்நிலையில், இது போன்ற மோசடிகளுக்கு பலியாகாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|