எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட இழப்பிற்கான நட்டஈட்டை பெற சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற தீர்மானம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, July 13th, 2021எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் நட்டஈடு பெறும் நடவடிக்கைகளுக்காக சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நீதியமைச்சு தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துளளார்.
குறித்த கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதற்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிலும் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
முன்பதாக கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் தீப்பற்றலுக்குள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலினால் மேற்கு கடல்வளம் பாதிக்கப்பட்டதுடன் மீனவர்களும் இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.
Related posts:
17 பேர் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் - மஹிந்த தேஷப்பிரிய!
கிரிக்கட் மீதான தடை - சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை...
கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத மாணவன் ஒருவனால் உத்தியோ...
|
|